Thursday, January 23, 2014

தமிழ கொஞ்சம் (சு )வாசிங்க பாஸ் !


வணக்கம் நண்பர்களே,

                                      கொஞ்சம் கடுப்புலதாங்க இத பகிர்ந்துக்கிறேன். காரணம் கேட்டிங்கன்னா உங்கள்ல சில பேருக்கும் "என்ன கொடும சரவணா இது"னு தோணும். தாய்மொழில எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை "சில" இல்லை தப்புத் தப்பு " இப்போ இருக்கிற பல யுவன் யுவதிகளுக்கு". ரி புரிகிறது.. ஆயிரம் காரணம் இருக்கலாம். அதற்காக? "தாய்மொழியை  விட்டுவிடுவதா?" அப்படியே பிறமொழிகளை முதல்மொழியாக பயிலும் நண்பர்களுக்கு அம்மொழிகளில் ஒழுங்கான முறையிலும், சரளமாகவும் உரையாடவோ திருத்தமாக எழுதவோ தெரிவதில்லை. பெரிதாக வேண்டாம் "ஒன்றுமே தெரியாது" என்று கூறுவதற்கு பதிலாக " ஓரளவுக்கு தெரியும்" என்று கூறும் நிலைக்குத் தேறுவதில் கடினமேதும் உண்டோ? சிந்தியுங்கள்!

                                 "அட சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா" என்று வசனம் பேசினா மட்டும் போதாதுங்க. நம்மூர் பாஷையை (சு)வாசிக்கத் தெரியனும். வேற்று மொழியினர் தமிழை ஆர்வத்துடன் கற்கிறார்கள் . "என் பெயரை எப்படி எழுதுவது" என்று கேட்கும்பொழுது எழும் பெருமைக்கு அளவில்லை.அவர்களே "ஏன் சில தமிழர்களே தமிழ் தெரியாது என்கிறீர்கள்" என்று கேட்கும்போது "வெட்கம் கூட   தலை  குனிந்து  நிற்கும் .அக்கணம் "தமிழன் என்று கூறி தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் தவிப்பே மிஞ்சுகிறது..

                                  வேற்று மொழியினை அறிவதில் தவறில்லை ஆனால் தாய்மொழியை "தெரியாது" என்று கூறுவதே குற்றம்.. அசிங்கமும் கூட!

இந்நிலை மாறவே விழைகிறேன் :)

                                                                            

2 comments:

  1. oh great well said shriya ,en kannai thirandhu vitirgal!! mikka nandri

    ReplyDelete
    Replies
    1. yaar manadhaiyum punpaduthavillai endre nambugiren mr.Adhi :P

      Delete

comments செப்புங்க :-)