Saturday, January 25, 2014

நெஞ்சத்துள் நீ மட்டும்!

நீ... நான்...நாம்!


துயில் எழுந்து
சோம்பல் முறிக்கையில்
ஓயாது என்னுல்கலந்த
உன் நினைவுகள்...

அய்யோ வேண்டாமென்று
ஒதுங்கிய தருணத்தில்
விரல்களைத் தூண்டிய
உன் குறுந்தகவல்கள்...

கண்ணீர் வந்து
தலையணையில் சாய்கையில்
சுவாரஸ்யத்தை கூட்டிய
உன் அழைப்புகள்...

மனம் திறந்து
என்னுடன் உரையாடியதில்
என்னுள்ளத்தை அள்ளிய
உன் எண்ணங்கள்...


குழப்பம் வந்து
வெட்கத்தில் மறைக்கையில்
காதலை பருகிய
உன் விழிகள்...

இவையனைத்தும் இன்று-நம்
விரல்கள் இணைகையில்
ஞாபகத்தில் சிரிக்கின்ற
இதமான இம்சைகள்!






12 தரும் எல்லையில்லா ஆனந்தம் 





தூங்காது 
தடவிக்கொண்டிருந்தேன் 
திரையினை ..

கண்கொட்டாது 

ரசித்திருந்தேன் 
புகைப்படத்தினை ...

வேதனையோடு 

தவித்திருந்தேன் 
முட்கள்  இணையும்வரை ...

நீ  அனுப்பும் 

"hey slept?"
கேள்விக்கு 
"no idiot"
பதிலளிக்க... 

பிறகு 
நாம்  இருவரும் 
உறங்கிவிட்டதால் !
நமக்கென காத்திருந்தது 
அந்த நொடி........! 



3 comments:

comments செப்புங்க :-)